என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மறைமுகமாக மளிகை வியாபாரம்
Byமாலை மலர்1 Jun 2021 1:51 PM IST (Updated: 1 Jun 2021 6:26 PM IST)
திருப்பூர் மாவட்டத்தில் மறைமுகமாக மளிகை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் முழு ஊரடங்கு தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.
இருப்பினும் சில இடங்களில் மளிகைகடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று பெறுவதாக புகார்கள் எழுந்தது.குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படும் மளிகை கடைகளில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பாதியளவு திறந்து வைத்து வியாபாரம் செய்தனர். அரசின் உத்தரவை மதிக்காமல் சிலர் செயல்படுவதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் தெரு பகுதிகள், ஊரின் ஒதுக்குப்புற பகுதிகள், கிராமப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.அப்போது சில இடங்களில் திறந்து வைக்கப்பட்டிருந்த மளிகை கடைகளின் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X