என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கரூர் அருகே வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்30 Jun 2021 3:26 PM IST (Updated: 30 Jun 2021 3:26 PM IST)
கரூர் அருகே வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
பஞ்சாப் மாநிலம் கிழக்கு லூதியானா பஸ்தி டிஜே தேவாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வருண் குமார் காசியாப். இவரது மனைவி பிரீத்தி (வயது 25). இவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கரூர் அருகே உள்ள ஆட்டையம்பரப்பு பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாததால் பிரீத்தி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் பிரீத்தியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X