என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உலக மக்கள் தொகை தினம் இன்று- மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
Byமாலை மலர்11 July 2021 12:13 PM IST (Updated: 11 July 2021 1:15 PM IST)
கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் உலக மக்கள்தொகை வளர்ச்சியானது விரைவாக அதிகரிக்க தொடங்கியது.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலக மக்கள் தொகை 5 பில்லியனை தாண்டியது.
கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் உலக மக்கள்தொகை வளர்ச்சியானது விரைவாக அதிகரிக்க தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. இருப்பினும், 1960 இல் 300 கோடி மக்கள் தொகையை 33 ஆண்டுகளிலேயே எட்டியது. 1999ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்ததாக குடித்தொகை மதிப்பீட்டு பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சனைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகள் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக கூறப்படுகிறது. மேலும், இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X