search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூரில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
    X
    மேலூரில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

    மேலூரில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

    இன்று காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் தேங்கிய மழை நீரில் நின்று கொண்டே வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று ஆடு, மாடு, கோழி ஆகிய வற்றுக்கான சந்தைகள் நடைபெறுவது உண்டு.

    மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஆடுகளை வாங்குவதற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மேலூர் கால்நடை சந்தையானது களைகட்டி இருக்கும்.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு, மற்றும் கோழிகளை விற்பனைகாக இன்று கொண்டு வந்தனர்.

    இதனை வாங்குவதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள், கோழி விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைச் சந்தைகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. வழக்கத்தைவிட கூடுதலாக விலைக்கு விற்பனை செய்ததால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் தேங்கிய மழை நீரில் நின்று கொண்டே வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடை வியாபாரம் நடைபெற்றது. சந்தைப்பேட்டை பகுதிகளில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கியும் அங்கிருந்து வாங்கிய கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்ல ஏராளமான வேன்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    Next Story
    ×