search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சோழவந்தானில் மது போதையில் தொழிலாளி குத்திக்கொலை- நண்பர் கைது

    சோழவந்தானில் மது போதையில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் ஷா. இவரது மகன் கருப்புராஜா (வயது 35). தேங்காய் கடையில் ஊழியராக வேலை பார்த்தார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜாங்கீர் (32) என்பவரும் நண்பர்களுடன் நேற்று வீட்டின் அருகில் தீபாவளியை கொண்டாடி விட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பானது. ஆத்திர மடைந்த ஜாங்கீர், கருப்பு ராஜாவை கத்தியால் குத்தினார்.

    ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்த கருப்புராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தேங்காய் கடை தொழிலாளியை கொன்ற ஜாங்கீரை போலீசார் கைது செய்தனர். இறந்த கருப்பு ராஜாவுக்கு மனைவியும், 11 வயது மகனும் உள்ளனர்.

    Next Story
    ×