search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சி மண்டலத்தில் ஒரே நாளில் ரூ.56 கோடியே 82 லட்சத்திற்கு மது விற்பனை

    திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்த உடன் மது பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
    திருச்சி:

    தமிழகத்தில் நேற்யை தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தில் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை குதூகலத்துடன் கொண்டாட மது பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்த உடன் மது பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

    இதனால் மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் சற்றும் ஓய்வற்ற நிலையில் மது பிரியர்களுக்கு தொடர்ந்து மது பாட்டில்களை எடுத்து கொடுத்த வண்ணம் இருந்தனர்.

    சிலர் மதுவை அதிகம் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதை மறந்து சாலைகளில் விழுந்து கிடந்தனர். ஒருசிலர் மது பாட்டில்களை பெட்டிகளில் வாங்கி கொண்டு பரபரப்பாக அங்கும் இங்குமாய் உலாவிக் கொண்டிருந்தனர். திருச்சி மண்டலத்தை பொருத்தமட்டில் 12 மாவட்டங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இந்த திருச்சி மண்டலத்தில் நேற்றைய தினம் மது விற்பனை அமோக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    தொடர்ந்து இயல்பான நாட்களில் திருச்சி மண்டலத்தில் சுமார் ரூ.30 கோடி அளவில் மதுபானம் விற்பனை செய்யப்படும். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை என்பதால் மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் 2 தினங்களுக்கு முன்பே மதுபானங்கள் அதிகமாக விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் இரவு 8 மணி வரையில் திருச்சி மண்டலத்தில் ரூ.56 கோடியே 82 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×