என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் இளம்பெண்ணுக்கு செல்போனில் தொந்தரவு-2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்7 Nov 2021 8:31 AM GMT (Updated: 7 Nov 2021 8:31 AM GMT)
கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
உடுமலை:
உடுமலையை அடுத்த எலையமுத்தூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர் 20 வயது இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபரத்தை அந்தபெண் தனது அண்ணனிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் அண்ணன் கதிரேசனை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடும்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமராவதி போலீசார் கதிரேசன், கருப்பன் என்கின்ற கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கையை தொந்தரவு செய்தவரை தட்டிக்கேட்க சென்ற அண்ணன் தாக்கப்பட்ட சம்பவம் எலையமுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X