என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருப்பூர் அருகே கார் விபத்தில் நிதி நிறுவன அதிபர் மனைவி பலி
Byமாலை மலர்10 Nov 2021 6:58 AM GMT (Updated: 10 Nov 2021 6:58 AM GMT)
இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில்:
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள பெரிய திருமங்கலத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி கோகிலாம்பாள் (41). இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு வந்தனர்.
இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், சக்திவேல் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இதில் கோகிலாம்பாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சக்திவேலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கோகிலாம்பாள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X