search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை
    X
    சிறை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இது குறித்து பெற்றோரிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ராஜதுரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்
    Next Story
    ×