search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

    ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ரெயில் பயணிகள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×