என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் குரு பெயர்ச்சி வழிபாடு
Byமாலை மலர்14 Nov 2021 8:40 AM GMT (Updated: 14 Nov 2021 9:02 AM GMT)
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு அடைய மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேகம், யாக வேள்விகள், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.
அவினாசி:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவக்கிரக கோட்டையில் பிலவ வருட குருபெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது.
மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.20 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை, வேள்வி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு அடைய மகாயாகம், 1008 தீர்த்த கலச அபிஷேகம், யாக வேள்விகள், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.
விழாவை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங் கேஸ்வரசுவாமிகள் யாகவேள்வி பூஜை களை நடத்தி அருளுரை யாற்றினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டனர்.
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில்களில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு மங்கல இசை, காயத்ரி மந்திர ஹோமத்துடன் தொடங்கி 108 வகையான மூலிகை திரவிய ஹோமம், விசேஷ அபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
கொங்கு ஏழு சிவால யங்களில் முதன்மை பெற்றதும் முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டெடுத்து பிரசித்தி பெற்ற தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனுறை அவிநாசி லிங்கேசுவரர் கோவில் விளங்குகிறது. குருபெயர்ச்சியை யொட்டி அவிநாசிலிங்கேசுவரர் கோவில் மண்டபத்தில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் யாகத்துடன் நடைபெற்றது.
பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடை பெற்றது.
இதையடுத்து சாமி பிரகார உலா நடை பெற்றது. இதேபோல திருமுருகன்பூண்டி திரு முருகநாதசுவாமி கோவில் மற்றும் சேயூர் வாலீஸ்வரர் கோவில்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
விழாவையொட்டி ஹோமம், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், சம்பந்தர் பிபி. சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் உடுமலை தளி சாலையில் கொட்டி தலை அருகிலுள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் உடுமலை தில்லைநகர் ரத்தின லிங்கேஸ்வரர், போடிபட்டி சூர்யா கார்டன் காரிய சித்தி விநாயகர் கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X