search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க்ரைம்.
    X
    க்ரைம்.

    அவினாசியில் 2 பேருக்கு கத்திக்குத்து

    ஆத்திரமடைந்த வினித், அபிலே-சை தகாத வார்த்தையால் திட்டியதுடன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அபிலேஷ் - மற்றும் சாந்தியை குத்தியுள்ளார்.
    அவினாசி:

    அவினாசி கச்சேரி வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி சாந்தி (வயது 45) . இவர்களது உறவினர் தருமபுரி பகுதியை சேர்ந்த மார்கண்டன் மகன் அபிலேஷ் (25). இவர் கோவிந்தசாமி வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். 

    இந்தநிலையில் சாந்தியின் உறவினர் மகன் தருமபுரியை சேர்ந்த வினித் (23) என்பவர் சாந்தியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது 3 பேரும் குடும்ப பிரச்சனை பற்றி பேசியுள்ளனர். 

    இதில் ஆத்திரமடைந்த வினித், அபிலேசை தகாத வார்த்தையால் திட்டியதுடன்,  வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அபிலேஷ் மற்றும் சாந்தியை குத்தியுள்ளார். இதில் இருவருக்கும் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து வினித்தை கைது செய்தனர்.  
    Next Story
    ×