search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பாபநாசம் அருகே ஆம்னி வேன் மோதி விவசாயி பலி

    பாபநாசம் அருகே ஆம்னி வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே வளத்தா மங்கலம் கீழத்தெருவில் வசித்து வந்தவர் பெரியசாமி (வயது 70) விவசாயி.சம்பவத்தன்று இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட பெரியசாமி சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த பெரியசாமி அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய மகன் கேசவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×