என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இடஒதுக்கீடு தீர்ப்பு: அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி - முன்னாள் எம்.பி.ராமதாஸ் பெருமிதம்
Byமாலை மலர்8 Jan 2022 11:26 AM IST (Updated: 8 Jan 2022 11:26 AM IST)
சுப்ரீம் கோர்ட்டின் இடஒதுக்கீடு தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் எம்.பி.ராமதாஸ் பெருமிதம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இதனால் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். தாமதப்படுத்தப்பட்ட, மறுக்கப்பட்ட நீதியாக இருந்தாலும், இன்றாவது இத்தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்டோரில் மிக பிற்படுத்தப்
பட்டோரும் சேர்க்கப்படுவார்கள். இதனால் மிக பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் பயனடைவர் என தெரியவில்லை.
எனவே இடஒதுக்கீடு மாநில அளவில் இருக்க வேண்டும். அகில இந்திய அளவில் இருக்கக்கூடாது. மாநில அரசே 100 சதவீத இடத்தையும் நிரப்ப வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் 69 சதவீத இடஒதுக்கீடை உறுதிபடுத்திய ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X