என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ரேசன் கடையில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்8 Jan 2022 1:17 PM IST (Updated: 8 Jan 2022 3:29 PM IST)
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார்.
மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்கிடையே ரேசனில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து ரேசன் கடையில் ஆய்வு செய்தார்.
தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார்.
மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் தினத்துக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஜனவரி 31-ந் தேதி வரை இதை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே ரேசனில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து ரேசன் கடையில் ஆய்வு செய்தார்.
தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரேசன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி பொருட்கள் தரமற்ற முறையில் இருக்கிறதா? என்று பரிசோதித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X