என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்16 Feb 2022 3:04 PM IST (Updated: 16 Feb 2022 3:04 PM IST)
மாணவியின் பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் தொங்குட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த டி.ஆண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் 12 ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பர்கூரைச் சேர்ந்த முருகன் மகன் தனபால்(23) என்பவருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களை அவிநாசிபாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பல்லடம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது .
தனபாலிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி தலைமையிலான போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X