என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தீத்தாம்பாளையம் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
Byமாலை மலர்16 Feb 2022 3:13 PM IST (Updated: 16 Feb 2022 3:13 PM IST)
மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் திங்கள் அன்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவிதா ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி அதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொண்டதன் பேரில் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டதாரி கணித ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள், நடுநிலை பள்ளியாக இருப்பதை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த கோருவது என முடிவு செய்தனர்.
கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவகுமார், ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமிநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி உட்பட ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X