என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நர்சரி பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை
Byமாலை மலர்16 Feb 2022 3:38 PM IST (Updated: 16 Feb 2022 3:38 PM IST)
கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது முதல் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன.
திருப்பூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலுக்கு இடையே 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கற்பித்தல் பணி நடக்கிறது.
கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது முதல் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. சிறு குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அரசு 2 ஆண்டுகளாக மழலையர் பள்ளிகளை திறக்க முன்வரவில்லை. இந்தநிலையில் கொரோனா தொற்று தற் போது குறைந்து கட்டுக்குள் இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடைபெறுகின் றன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மழலையர் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று அரசிடம் தனியார் பள்ளி நிர்வாகி கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிக்கூட வாசனையே தெரியாமல் 2 வருடங்களாக வீடுகளிலேயே முடங்கி, ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்த குழந்தைகள் இன்று முதல் நேரடி வகுப்புகளுக்கு சென்றனர்.
ஆசிரியர்களை நேரில் பார்க்கும் சூழ்நிலையும், அவர்களின் அன்பும் பரிவும் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பும் மீண்டும் உருவாகி உள்ளதால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில்:
எங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளை திறந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்துவோம்.
குழந்தைகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளுக்கு இதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதால் கற்றல் பணி எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே ஒரு சில நர்சரி பள்ளிகளுக்கு முறையான அறிவிப்பு வராததால் அந்த பள்ளிகளுக்கு இன்று குழந்தைகள் வரவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X