search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் 116 இடங்களை  கைப்பற்றி திமுக மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது.

    இதையடுத்து செய்தியாளர்கைள சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கடந்த 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழே இந்த வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்.

    இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது. திமுகவினர் இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திமுகவினர் எந்தப்புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போதே செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னோம்.. எங்களை ஆட்சியில் அமரவைத்தவர்கள் திருப்தியடையும் வகையிலும்,  வாக்கு அளிக்காதவர்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்கவில்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எங்களின் பணி இருக்கும். அப்படி தான் 9 காலமாக பணி செய்து வருகிறோம்.

    தேர்தல் முடிவுகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு மாநகராட்சி மேயர் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. திமுக வசமாகிறது சென்னை மாநகராட்சி


    Next Story
    ×