search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.
     
    இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து தி.மு.க. பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயக்குமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.



    Next Story
    ×