search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடத்தல்
    X
    கடத்தல்

    திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்- போக்சோவில் தொழிலாளி கைது

    பண்ருட்டி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை கடத்தியது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆனத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் படையப்பா (வயது 25). அந்த பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை திருமண செய்வதாக கூறி ஆசை காட்டினார். பின்னர் அந்த மைனர் பெண்ணை படையப்பா கடத்தி சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை.

    இது பற்றி பெற்றோர் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் மனுவில் திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்ற படையப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ராஜராம் ஆகியோர் வழக்குபதிவு செய்து படையப்பாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் படையப்பா புதுவை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மைனர் பெண்ணுடன் படையப்பாவை மீட்டனர். மீட்கப்பட்ட மைனர் பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். படையப்பா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதானார்.
    Next Story
    ×