என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மு.க.ஸ்டாலினால் தமிழகம் வளம் பெறப்போகிறது- அமைச்சர் துரைமுருகன்
Byமாலை மலர்3 March 2022 2:16 PM IST (Updated: 3 March 2022 2:16 PM IST)
மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இந்து அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் மனிதநேய திருநாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் ஏ.நாகராஜன் தலைமையில் வாழ்த்தொலி அரங்கம் நடந்தது. ப.ரங்கநாதன், இரா.கிரிராஜன், ஐ.சி.எப்.முரளிதரன், தேவ ஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர்செல்வம், சரிதா மகேஷ்குமார், ஆர்.எஸ்.சித்திக், துரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
‘’எம்.ஜி.ஆர் எனக்கு நெருக்கமானவர். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது தனது கட்சிக்கு அழைத்தும் நான் போகவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் ஒரே கட்சியில்தான் இருப்பேன். எனது தலைவர் கலைஞர். நான் கட்சி மாற மாட்டேன் என்றேன். உனது உறுதியை நான் பாராட்டுகிறேன் என்றார்.
தி.மு.க.தான் தமிழர்களை காப்பாற்றக் கூடிய கட்சி. இது ஒன்றுதான் நிலையான கொள்கை உடைய கட்சி. கலைஞரோடு நெருக்கமாக இருந்து இருக்கிறேன். அவரது குணாதிசயம் எனக்கு தெரியும். அவரது அணுகுமுறையை மு.க.ஸ்டாலினிடம் பார்க்கிறேன். இந்த கட்சியை வளர்த்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கட்சியை காட்டி கொடுப்பவர்கள் துரோகிகள். கலைஞர் பேசி செயல்படுவார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதிகம் பேச மாட்டார். அவரிடம் செயல் மட்டும்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தமிழன் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 569 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இந்து அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் மனிதநேய திருநாளாக கொண்டாடப்படுகிறது.
சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் ஏ.நாகராஜன் தலைமையில் வாழ்த்தொலி அரங்கம் நடந்தது. ப.ரங்கநாதன், இரா.கிரிராஜன், ஐ.சி.எப்.முரளிதரன், தேவ ஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர்செல்வம், சரிதா மகேஷ்குமார், ஆர்.எஸ்.சித்திக், துரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
‘’எம்.ஜி.ஆர் எனக்கு நெருக்கமானவர். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது தனது கட்சிக்கு அழைத்தும் நான் போகவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் ஒரே கட்சியில்தான் இருப்பேன். எனது தலைவர் கலைஞர். நான் கட்சி மாற மாட்டேன் என்றேன். உனது உறுதியை நான் பாராட்டுகிறேன் என்றார்.
தி.மு.க.தான் தமிழர்களை காப்பாற்றக் கூடிய கட்சி. இது ஒன்றுதான் நிலையான கொள்கை உடைய கட்சி. கலைஞரோடு நெருக்கமாக இருந்து இருக்கிறேன். அவரது குணாதிசயம் எனக்கு தெரியும். அவரது அணுகுமுறையை மு.க.ஸ்டாலினிடம் பார்க்கிறேன். இந்த கட்சியை வளர்த்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கட்சியை காட்டி கொடுப்பவர்கள் துரோகிகள். கலைஞர் பேசி செயல்படுவார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதிகம் பேச மாட்டார். அவரிடம் செயல் மட்டும்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தமிழன் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 569 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X