search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆட்டோ
    X
    ஆட்டோ

    இந்து முன்னணி ஆட்டோ சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது- மாநில தலைவர் அறிவிப்பு

    கொரோனா கால கட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத கம்யூனிஸ்டு கட்சிகள் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஆட்டோ தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை கஷ்டப்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள்.

    சென்னை:

    இந்து முன்னணி தொழிற் சங்கமான இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யும் கம்யூனிஸ்டு கட்சிகள் 28, 29-ந்தேதியன்று ஆட்டோ வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

    கொரோனா கால கட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத கம்யூனிஸ்டு கட்சிகள் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஆட்டோ தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை கஷ்டப்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள்.

    கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×