என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுக்கான பயிற்சி மையம்
Byமாலை மலர்8 April 2022 2:05 PM IST (Updated: 8 April 2022 2:05 PM IST)
அரியலூரில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது
அரியலூர்:
அரியலூர் ராஜேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுக்கான முதன்மை பயிற்சி வகுப்பு அரங்கம் மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அரியலூர் ராஜேஷ் ஐஏஎஸ் அகாடமி மிக சிறப்பான பயிற்சியை அளித்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போலீஸ், எஸ்ஐ உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் எண்ணற்ற மாணவர்கள் வெற்றி பெற்று இன்று அரசுப் பணியில் உள்ளனர்.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் உள்ள டிரக்ஸ்டோர் 2வது மாடியில் இந்த பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்க்க மக்கள் அதிக கட்டணம் செலுத்தி முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி பெற சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்ல முடியாமல் தங்களது வாய்ப்புகளை இழக்கின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு ராஜேஷ் ஐஐஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 குரூப்-2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு புதிய அரங்கை திறந்து வைத்தார்.
இந்த பயிற்சி அரங்கில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படக்கூடிய நூலகம், முந்தைய ஆண்டு பயிற்சி வினாத்தாள்கள், தினசரி நாளிதழ்கள், இலவச வை-பை வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் படிக்கும் வகையில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் பயிற்சி விவரங்களுக்கு 9095106081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாக இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X