என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மன்னார்குடியில் புதிய வேளாண்மை கல்லூரி- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
Byமாலை மலர்8 April 2022 2:37 PM IST (Updated: 8 April 2022 2:37 PM IST)
டெல்டா பகுதியான மன்னார்குடியில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கேட்டுக் கொண்டார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
15 மாவட்டங்களில் விவசாய கல்லூரிகள் இல்லாமல் உள்ளது. அதில் மன்னார்குடியும் ஒன்று. வேளாண்மை கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவைப்படும். வருங்காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்ற மாநிலங்களில் ஒன்றை விட அதிகமான வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வேளாண்மை கல்லூரி மட்டுமே உள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் அதனை டெல்டா பகுதியான மன்னார்குடியில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதனை மன்னார்குடியில் அமைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
15 மாவட்டங்களில் விவசாய கல்லூரிகள் இல்லாமல் உள்ளது. அதில் மன்னார்குடியும் ஒன்று. வேளாண்மை கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவைப்படும். வருங்காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்ற மாநிலங்களில் ஒன்றை விட அதிகமான வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வேளாண்மை கல்லூரி மட்டுமே உள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் அதனை டெல்டா பகுதியான மன்னார்குடியில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதனை மன்னார்குடியில் அமைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...கூட்டுறவுத்துறை மோசடியை விசாரிக்க தனி சிறப்பு கோர்ட்டு- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X