என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
Byமாலை மலர்8 May 2022 3:00 PM IST (Updated: 8 May 2022 3:00 PM IST)
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிக ளுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண் மற்றும் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
கை, கால் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், கை ஊனமுற்றோர், குள்ளமானோர், இருகால்களும் ஊனமுற்றோர், பார்வையற்றோர், முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவு, புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இல்லாதவர்கள், புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்கள். காதுகேளாதோர் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் 50, 100, 200, 400 மீ. ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100மீ சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல், சாப்ட் பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள், பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், பார்வையற்றோர் பிரிவில் கையுந்து பந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து, காது கேளாதோர் பிரிவில் கபாடி போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனை த்து மாற்றுத்திறனாளி வீரர். வீராங்கனைகளுடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிக ளுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண் மற்றும் பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
கை, கால் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், கை ஊனமுற்றோர், குள்ளமானோர், இருகால்களும் ஊனமுற்றோர், பார்வையற்றோர், முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவு, புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இல்லாதவர்கள், புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்கள். காதுகேளாதோர் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் 50, 100, 200, 400 மீ. ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100மீ சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல், சாப்ட் பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள், பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், பார்வையற்றோர் பிரிவில் கையுந்து பந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து, காது கேளாதோர் பிரிவில் கபாடி போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனை த்து மாற்றுத்திறனாளி வீரர். வீராங்கனைகளுடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X