என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்9 May 2022 12:13 PM IST (Updated: 9 May 2022 12:13 PM IST)
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வு தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், இப்போக்கு தொடர்வது ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பருத்தி நூல் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில், பருத்தி நூல் மீதான 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த ஏப்ரல் 14ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
அதன் காரணமாக பருத்தி நூல் விலை குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நூல் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்திருப்பது துணித்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், விசைத்தறி உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இத்துறைகளின் மூலம் நாட்டிற்கு மிக அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது.
ஆனால், பருத்தி நூல் விலை உயர்வு இந்த தொழில்கள் அனைத்தையும் சிதைத்து விடும். உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகச் சூழல், எரிபொருட்கள் விலை உயர்வால் அதிகரித்துள்ள சரக்குக் கட்டணம், தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆயத்த ஆடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு முன்பாக பெறப்பட்ட ஆர்டர்களை, முன்பு ஒப்புக்கொண்ட விலையில் முடித்துக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆயத்த ஆடை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆயத்த ஆடை நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அது அவற்றை நம்பியுள்ள துணைத் தொழில்களை கடுமையாக பாதிக்கும்.
அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், மிகப்பெரிய அளவில் வேலை இழப்பும், பொருளாதார பின்னடைவும் ஏற்படும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு நூல் விலையை கட்டுப்படுத்தி, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில்துறைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நூல் இழைகளை முழுமையாக சந்தைக்கு கொண்டு வருவது, பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றை சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வு தொடர்கதையாகி வருவது கவலையளிக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், இப்போக்கு தொடர்வது ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பருத்தி நூல் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில், பருத்தி நூல் மீதான 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த ஏப்ரல் 14ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
அதன் காரணமாக பருத்தி நூல் விலை குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நூல் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்திருப்பது துணித்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், விசைத்தறி உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இத்துறைகளின் மூலம் நாட்டிற்கு மிக அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது.
ஆனால், பருத்தி நூல் விலை உயர்வு இந்த தொழில்கள் அனைத்தையும் சிதைத்து விடும். உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகச் சூழல், எரிபொருட்கள் விலை உயர்வால் அதிகரித்துள்ள சரக்குக் கட்டணம், தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆயத்த ஆடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு முன்பாக பெறப்பட்ட ஆர்டர்களை, முன்பு ஒப்புக்கொண்ட விலையில் முடித்துக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆயத்த ஆடை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆயத்த ஆடை நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அது அவற்றை நம்பியுள்ள துணைத் தொழில்களை கடுமையாக பாதிக்கும்.
அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், மிகப்பெரிய அளவில் வேலை இழப்பும், பொருளாதார பின்னடைவும் ஏற்படும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு நூல் விலையை கட்டுப்படுத்தி, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில்துறைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நூல் இழைகளை முழுமையாக சந்தைக்கு கொண்டு வருவது, பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றை சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X