search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுபாட்டில்கள் பதுக்கிய 24 பேர் கைது
    X

    மதுபாட்டில்கள் பதுக்கிய 24 பேர் கைது

    • மதுக்கடைகளில் அதிக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்லும் போது போலீசார் 24 பேரை பிடித்து கைது செய்துள்ளனர்.
    • 20 லிட்டர் கள்ளச்சாராயமும், 1000 ஊறல்களையும் அழிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தொழிலாளர்கள் தினத்தையொட்டி இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கை மூலம் தெரிவித்தார்.

    இதனால் மதுக்கடைகள் விடுமுறை நாட்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பவர்கள் மதுபாட்டி ல்களை பெட்டி பெட்டியாக வாங்குவது வழக்கம்.

    அதனை தடுக்க நேற்று மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனால் போலீசார் மதுக்கடையில் அதிக மது பாட்டில்களை வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மதுக்கடைகளில் அதிக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்லும் போது போலீசார் 24 பேரை பிடித்து கைது செய்துள்ளனர். இதில் 7 இருசக்கர வாகனமும், 750 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 20 லிட்டர் கள்ளச்சாராயமும், 1000 ஊறல்களையும் அழிக்கப்பட்டது.

    Next Story
    ×