search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்- ஏ.ஐ.டி.யூ.சி.
    X

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்- ஏ.ஐ.டி.யூ.சி.

    • அரசு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியா ற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தன்னி ச்சையாக அறிவித்துள்ளதை ஏற்று கொள்ள முடியாது.

    ஏ. ஐ. டி .யூ .சி. சம்மேளனம் சார்பில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாகபோனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    எனவே உடனடி யாக அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி 25 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட வேண்டும்.

    அதேபோல அரசின் நலத்திட்டங்களையும், அரசிற்கு வருவாய் ஈட்டி வருகின்ற நுகர்பொருள் வாணிப கழகம், டாஸ்மாக், ஆவின் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×