search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேனியில் சதுர்த்தியன்று 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தேனியில் சதுர்த்தியன்று 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு

    • தேனியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • இதில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது

    தேனி:

    தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் அடுத்த மாதம் 31ம் தேதி 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்துக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டி வரவேற்றார். கூட்டத்தில் கம்பத்தை சேர்ந்த ராஜகுருபாண்டி, மாயலோக கண்ணன், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்த ராஜ், மாவட்ட செயலா ளர்கள் ராமமூர்த்தி, வெங்கலபாண்டி, மாவட்ட பொருளாளர் செந்தில்கு மார், இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி தேனி நகர தலைவர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறு ப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று தேனி நகர் மற்றும் மாவட்ட அளவில் 250 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×