search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேனியில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனியில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை

    • தேனியில் வெவ்வெறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்த கார்த்திக் தேனியில் உள்ள ஓட்டலில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனக்கு யாரும் இல்லை என கூறி புலம்பி யுள்ளார்.

    சிறிது நேரத்தில் ஓட்டல் மாடியில் அவர் தங்கி இருந்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்க ளுக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கண்டமனூர் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (55). கடந்த 3 வருடங்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×