என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
- படுகாயம் அடைந்த கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம் (வயது 21). கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விஷ்ணு (21) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.மோட்டார் சைக்கிளை விஷ்ணு அதிவேகமாக ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - அவினாசி ரோட்டில் சென்ற போது விஷ்ணு ரோட்டின் நடுவே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றார்.
அப்போது பின்னால் அமர்ந்து இருந்த கவுதம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் அருகே உள்ள புகலூரை சேர்ந்தவர் கந்தசாமி (69). டிரைவரான இவர் லாரியை ஓட்டிச் சென்று டிராக்டர் மீது மோதினார்.இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (40). சம்பவத்தன்று இவர் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மொபட் பாபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்