search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து  3 பேர் படுகாயம்
    X

    விபத்துக்குள்ளான கார்.

    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

    • திண்டுக்கல்- மதுரை சாலையில் வந்த கார் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது
    • இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி :

    வேலூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்தவர் மோகன் (வயது42). இவர் தனது மனைவி சோனியா (36), மகள் அனுஷியா (12) ஆகியோருடன் காரில் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றார்.

    திண்டுக்கல்- மதுரை சாலையில் போக்குவரத்து நகர் அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் மோகன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×