search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கத்தி காட்டி மிரட்டிய 3 பேர் கைது
    X

    வாலிபரை கத்தி காட்டி மிரட்டிய 3 பேர் கைது

    • பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீதாராம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீத் (வயது24). டூவிலர் மெக்கானிக்கான இவர் ஓசூர் பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பக்கபிரகாஷ் (32), பர்கத் என்கிற ஆப்பிள் (25), பாலா என்கிற பாலாஜி (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஹபித்திடம் வேண்டுமென்றே வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்க தொடங்கினர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹபித்தின் கையை வெட்டினர். மேலும், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி பிரகாஷ், காமட்சி, பாயாஸ், மீன்வியாபாரி முரளி ஆகிய 4 பேரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து ஹபித் உள்பட 4 பேரும் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்கத், பக்கபிரகாஷ், பாலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோன்று ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதுகுறித்து சாந்தா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவாஸை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×