search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அன்னூர் அருகே தோட்டத்தில் மோட்டார் பம்பை திருட முயன்ற 3 பேர் கைது
    X

    அன்னூர் அருகே தோட்டத்தில் மோட்டார் பம்பை திருட முயன்ற 3 பேர் கைது

    • 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார்.
    • 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடினர்.

    கோவை,

    கோவை அன்னூர் அருகே திப்புநாயக்கன்பாளையத்ததை சேர்ந்தவர் மூர்த்தி(47). விவசாயி. இவர் தனது தோட்டத்து அறையில் பழுது பார்பதற்காக 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடுவதை பார்த்த அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அன்னூர் வடக்கலூரை சேர்ந்த அருள்பிரகாஷ்(33), ஜீவானந்தம் (33), சின்னதுரை(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×