search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம்  எம்.எஸ்.பி.வி கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 3 மாணவர்கள் தேர்வு
    X

    தேர்வான மாணவர்கள்.

    பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 3 மாணவர்கள் தேர்வு

    • எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்ச்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் எலக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பெங்களூர் ஸ்மார்ட் டிவி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.

    தேர்வில் கலந்து கொண்ட 23 மாணவர்களில் கணினித் துறையை சேர்ந்த இசக்கிமணி, சூர்யா, எலக்ட்ரானிக்ஸ் துறையில் மதன் ஆகிய 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. தேர்வுபெற்ற மாணவர்களை கல்லுரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்ரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத் தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பராட்டினர். நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகளை காலூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் செய்திருந்தார்.

    Next Story
    ×