search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் போதை மாத்திரைகள் விற்ற 3 வாலிபர்கள் கைது
    X

    கோவையில் போதை மாத்திரைகள் விற்ற 3 வாலிபர்கள் கைது

    • கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்றனர்.
    • வாலிபர்களிடமிமுருந்து 258 போதை மோத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரில் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கோவையில் தங்கி கல்லூரிகளில் படித்தும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர்.

    கொரோனா கால கட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க மாநகர போலீசார் கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மேலும் போதை மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலையும் கைது செய்து வருகின்றனர். இது வரை கோவை மாநகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மசக்காளிப்பளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு ரத்தினபுரியை சேர்ந்த சியாம் என்ற யாசின் (வயது 28), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அன்வர் சாதிக் (28), கரும்புக்கடையை சேர்ந்த சுல்தான் பாட்ஷா (27) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 258 போதை மோத்திரைகள், சோடியம் குளோரைடு பாட்டில் 32, 10 ஊசி, சிரஞ் 14 ஆயிவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×