search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குட்கா, லாட்டரி விற்ற 30 பேர் கைது
    X

    குட்கா, லாட்டரி விற்ற 30 பேர் கைது

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர்.
    • மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், மகராஜகடை உள்பட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அநத வகையில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,630 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×