search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற 4 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 4 பேர் கைது

    • கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    தொப்பூர் அருகே உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்த சரவணன், அரூர் கிளம்பாறை அருகே உள்ள அங்கமுத்து, ஏரியூர் அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், பென்னாகரம் அருகே உள்ள அஜன் நெல்லி கிராமத்தை சேர்ந்த அன்பு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×