search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து பணிமனையில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள்  சஸ்பெண்டு
    X

    போக்குவரத்து பணிமனையில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் சஸ்பெண்டு

    • போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து பணிமனையில் சம்பவத்தன்று போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.

    அவர்கள் சண்டை யிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மோதலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகி யுவராஜ், ஓட்டுனர் ராஜா உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×