search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
    X

    செஞ்சி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

    • செஞ்சி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    விழுப்புரம்:

    செஞ்சி மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கம், தீபா ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன் ராஜ், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர், அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அரவிந்தன் (வயது20), நூர்முகமது (19), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித் (15), ஆலம்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (18) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×