search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
    X

    வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது

    • மர்மநபர்கள் சிலர் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தனபால் (வயது 32). கொத்தனார்.

    இவர் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து திருநிலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய தியாகராஜபுரம் சுந்தர் (வயது 27), முத்துப்பிள்ளை மண்டபம் அழகர் (22), மேலக்காவேரி சாதிக் பாஷா (19), பழவாத்தான்கட்டளை முருகேசன் (28) ஆகிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×