search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
    X

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

    • கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.
    • விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை.

    சென்னை:

    வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு கூலி வேலைகளில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர்கள் சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் 11 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தனர்.

    பொன்னேரி பகுதியில் விவசாய வேலைக்காக வந்த அவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர். 2 நாட்களாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தங்கி இருந்தனர்.

    உணவு சாப்பிடாமல் இருந்த அவர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். மேற்கு வங்காளத்திற்கு திரும்பி செல்ல காத்திருந்த 10 பேர்களில் 4 பேர் மயக்கம் அடைந்தனர்.

    பசியின் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி இருந்த நிலையில் அவர்களை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள அவசர உதவி மையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வடமா நிலத்தவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×