search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் 400 போலீசார் பாதுகாப்பு
    X

    கோவையில் 400 போலீசார் பாதுகாப்பு

    • மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் உள்ள பள்ளிவாசல்கள், இந்து முன்னணி அலுவலகம், பா.ஜ.க அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். இதுதவிர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு காமிராவும் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

    Next Story
    ×