search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 458 மனுக்கள் பெறப்பட்டது
    X

    தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 458 மனுக்கள் பெறப்பட்டது

    • பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இரண்டு நபர்களின் சடலத்தை மீட்டு வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக அவருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் குடியரசு தினத்தன்று பூதலூர் வட்டம், அக்கரப்பேட்டை சரகம், அலமேலுபுரம் பூண்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 4 நபர்களில் இரண்டு நபர்களை உயிருடன், இரண்டு நபர்களின் சடலத்தையும் மீட்டு வீர தீர செயல்கள் புரிந்தமைக்காக அவருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

    அந்த விருதை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரத்தை ஒரு பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர்

    நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×