search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
    X

    பந்தலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

    • 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி

    பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைசாவடியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை பந்தலூரிலிருந்து தனது ஆட்டோவில் ராஜேந்திரன் (62) உள்பட 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேங்கோ ரேஞ்ச்சில் பள்ளி சிறுவன் அப்துல்ரகுமான் 7 சாலை குறுக்கே ஓடி உள்ளான். இதில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ சிறுவன் மீது மோதியதோடு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×