என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பொள்ளாச்சியில் நகை- பணத்துக்காக மூதாட்டியை கொன்ற தாய்- மகன் உள்பட 5 பேர் கைது
- நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்து விட்டார். தெய்வானையம்மாள் தனியாக வசித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர் ஒருவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது. அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்த 7 அரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதனால் நகை, பணத்துக்காக தெய்வானையை யாராவது கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40) என்ற பெண் தெய்வானையம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது ஈஸ்வரியுடன் அவரது மகன் சஞ்சய் பழனி (19), அவரது நண்பர் கவுதமன் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை, பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூதாட்டியிடம் இருந்த நகை, பணத்தை அபகரிக்க பல நாட்கள் திட்டமிட்டு இருந்ததாகவும், சம்பவத்தன்று மாலை அவர் தூங்கிக் கொண்டு இருந்த போது கழுத்தை நெரித்து கொள்ளையடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் தவிர பானுமதி (30) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் பற்றிய விவரம் தெரிந்தும் அதனை மறைத்து அவர்களுக்கு உதவியதாக பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்