search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை ரேஷன் கடைகளில் ஒரே நாளில் 500 கிலோ தக்காளி விற்பனை
    X

    கோவை ரேஷன் கடைகளில் ஒரே நாளில் 500 கிலோ தக்காளி விற்பனை

    • 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோவை,

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி அரசு சார்பில் முதற்கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதனை 111 நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் விற்பனையை விரிவுபடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 500 நியாய விலைக்கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகள், சில பகுதிகளில் 15 கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி உள்பட 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இங்கு உள்ள ஒருசில ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. எனவே பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைகளுக்கு அதிகளவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளி பழங்களை வாங்கி சென்றனர்.

    கோவையில் உள்ள 20 ரேஷன் கடைகளில் 500 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆனால் ஒரே நாளில் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்து விட்டன.

    கோவை சாய்பாபா காலனி ரேஷன் கடைக்கு தக்காளி வாங்குவதற்காக வந்திருந்த பெண்கள் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கிறது. இதனால் நாங்கள் போதிய அளவில் வாங்க முடியாமல் வேதனைப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் அரசே, ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை கட்டுக்குள் வரும்வரை அரசு ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×