search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 545.6 மில்லி மீட்டர் மழை
    X

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 545.6 மில்லி மீட்டர் மழை

    • மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • துறையூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    திருச்சி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. திருச்சி மாநகரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தில்லை நகர் பகுதியில் வாகனங்கள் மழை நீரில் நீச்சல் அடுத்தபடி சென்றன. இந்த மழையினால் கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி, கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    துறையூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் துறையூர் பஸ் நிலையம், திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதேபோன்று லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் நேற்று இரவு குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது. மானாவாரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 545.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குடி 17.2, லால்குடி 9.4, நந்தியாறு அணைக்கட்டு 25 .6, புள்ளம்பாடி 33, தேவிமங்கலம் 13.4, சமயபுரம் 14.2, சிறுகுடி 10.2, வாத்தலை அணைக்கட்டு 8.4, மணப்பாறை 29, பொன்னணியாறு அணை 8.2, கோவில்பட்டி 20.2, மருங்காபுரி 36.4 ,முசிறி 37, புலிவலம் 10, தாப்பேட்டை 5, நவலூர் கொட்டப்பட்டு 39.5, துவாக்குடி 22.2 கொப்பம்பட்டி 43, தென்பர நாடு 29, துறையூர் 17, பொன்மலை 29.4, திருச்சி ஏர்போர்ட் 34.3, திருச்சி ஜங்ஷன் 34, திருச்சி டவுன் 20.

    Next Story
    ×