search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    • போலீசார் சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் கைது செய்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் ஹவுசிங்போர்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது34), தினஷே் (32), கோவிந்தசாமி (38), ஸ்ரீதர் (33), ரவி (38), முனியப்பா (32) ஆகிய 6 பேர் சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×